தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அமோக வெற்றி: முதல்-மந்திரியாக வாய்ப்பு

ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான வசுந்தரா ராஜே சிந்தியா, தான் போட்டியிட்ட ஜல்ராபதான் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வசுந்தரா ராஜே முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்ராபதான் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

வசுந்தரா ராஜே (பாஜக)- 1,38,831

ராம்லால் (காங்கிரஸ்) - 85,638

மகாசத் (பகுஜன் சமாஜ் கட்சி) - 3,431

பவன் குமார் மெஹர் (இந்திய மக்கள் பசுமை கட்சி) - 2,177.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு