தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 2 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து உள்ளது.

தினத்தந்தி

ஜெயப்பூர்,

ராஜஸ்தானில் இருவர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 292 பேர் தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.ஏற்கனவே தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிந்துள்ளனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் மாவட்டத்தில் பாபர்மர்கா, மஸ்தூர் படா ஆகிய பகுதிகளில் 2 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில அரசும் தொற்று தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்து

உள்ளது. டெல்லியில் புதிதாக 4 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்