தேசிய செய்திகள்

'நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்கட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும்' - ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

நாடாளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிகட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயகம் மற்றும் அனைத்து இந்தியர்களின் விருப்பங்களின் அடையாளமாக திகழ்வதாக தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு