தேசிய செய்திகள்

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ரனில் விக்ரமசிங்கே வழிபாடு

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ரனில் விக்ரமசிங்கே வழிபாடு செய்தார்.

தினத்தந்தி

உடுப்பி,

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அங்கு மூகாம்பிகையை வழிபட்ட ரனில் விக்ரமசிங்கே, இலங்கை மக்களின் நலனுக்காக நவசண்டிகா ஹோமமும் நடத்தினார்.

முன்னதாக மங்களூரு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் கோவிலை அடைந்தார். அந்த பகுதியில் கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்தார்.

ரனில் விக்ரமசிங்கேவின் வருகையையொட்டி கொல்லூரில் பலத்த பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. தனியார் வாகனங்கள் கொல்லூர் நகரில் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்