தேசிய செய்திகள்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயார்- பிரதமர் மோடி

ஜப்பானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜப்பானில் கடந்த 1-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 100 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

"நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஜப்பானுடனான உறவை இந்தியா மதிக்கிறது. இந்த நேரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்