தேசிய செய்திகள்

திப்பு ஜெயந்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

திப்பு ஜெயந்தி விழா கொண்டாட விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்த முடிவை கர்நாடக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட் வலியுறுத்தியுள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. ஆனால், சமீபத்தில் பதவியேற்ற எடியூரப்பா அரசு, திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படாது என்று அறிவித்தது.

இதை எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது இன்று இடைக்கால தீர்ப்பளித்த கர்நாடக ஐகோர்ட், கடந்த ஜூலை 30 ஆம் தேதி, திப்பு ஜெயந்தி விழா அரசு விழாவாக கொண்டாடப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இவ்விவகாரம் தொடர்பாக மாநில அரசு, தகுந்த முடிவை இரண்டு மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தது. மேலும், தனியாக திப்பு ஜெயந்தி விழா கொண்டாட உரிய பாதுகாப்பு அளிக்கவும் கர்நாடக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு