தேசிய செய்திகள்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

தினத்தந்தி

புதுடெல்லி,

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் 'மத்திய கல்வி அமைச்சகம்' என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், கல்லூரிகளில் சோவதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தோவு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4:30 மணிக்கு நாட்டு உரையாற்றுகிறார். இந்த உரையாடலில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்