தேசிய செய்திகள்

பங்காருபேட்டையில் கட்டப்பட்ட மணிக்கூண்டு அகற்றம்

பங்காருபேட்டையில் கட்டப்பட்ட மணிக்கூண்டை அகற்றி போலீசார் இரவில் அதிரடியாக நடவடிக்கை எடுத்தனர்.

தினத்தந்தி

கோலார் தங்கவயல்

கோலார் பஸ் நிலையம் அருகே மணி கூண்டு (கிளாக் டவர்) உள்ளது. பழமையான இந்த மணி கூண்டில் பச்சை கொடியை ஏற்றி வைத்து ஒரு சமுதாயத்தினர் வழிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் அந்த மணி கூண்டை சுற்றி தேசிய கொடியை சுற்றி, கொடியை ஏற்றி வைத்தனர்.

இதையடுத்து அந்த இடத்தில் சர்ச்சைகுரிய வகையில் எந்த அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் பங்காருபேட்டை நியூ டவுன் பகுதியில் கோலார் மணி கூண்டு போன்று, ஒரு மணிகூண்டு கட்டப்பட்டது.

இந்த மணி கூண்டால் அந்த பகுதியில் சர்ச்சை எழுந்தது. இந்த மணி கூண்டு பார்ப்பதற்கு ஒரு குறிபிட்ட சமுதாயத்தினரின் வழிப்பாட்டு தலம் போன்று இருந்தது. இதனால் அந்த பகுதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்து பங்காருபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற போலீசார் அந்த மணி கூண்டை இடித்து தரைமட்டமாக்கினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்