தேசிய செய்திகள்

இந்திய வான்வெளியை பயன்படுத்த இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்

இலங்கை செல்வதற்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று முதன் முறையாக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் பயணம் செய்யும் விமானம், இந்திய வான்வெளியில் பறப்பதற்கு இந்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி பயணம் செய்த விமானம், அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது. காஷ்மீரில் மனித உரிமைமீறல் நடப்பதாக குற்றம் சாட்டி இந்திய பிரதமருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

முக்கிய தலைவர்களின் விமானங்கள் சர்வதேச வான் எல்லையை பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவது வழக்கமாகும். இருப்பினும் பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்க மறுத்தது விதிமீறலாக கருதப்பட்டது. இந்த நிலையில் இன்று சர்வதேச விதிகளின்படி, இந்திய வான் எல்லைக்குள் பயணம் செய்ய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்