தேசிய செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள் 2 மாதங்களுக்கு பிறகு மீட்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகள், 2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நைஜீரியாவில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி 5 இந்திய மாலுமிகள் கப்பலில் சென்று கொண்டிருந்தனர். நடுக்கடலில் அவர்களை ஒரு மர்ம கும்பல் கடத்தியது. கப்பலில் இருந்து கரைக்கு அழைத்துச் சென்று ரகசிய இடத்தில் சிறை வைத்தது.

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதர் அபுஜா மூலமாக நைஜீரிய அரசை இந்திய கப்பல்துறை அமைச்சகம் அணுகி உதவி கோரியது. நைஜீரிய கடற்படை, அங்கு சென்று விசாரணை நடத்தியது.

நைஜீரிய அரசு, இந்திய தூதரகம், மத்திய கப்பல்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் 5 இந்திய மாலுமிகளும் கடந்த 27-ந் தேதி மீட்கப்பட்டனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி நடந்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்