தேசிய செய்திகள்

12 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பு: தெற்கு ரயில்வே

12 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் டிசம்பர் 3ம் தேதி முதல் இணைக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தெற்கு ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரெயில்களில் இணைப்பதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரெயில்களில், வரும் 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகள் இருக்கும் ரயில்களின் விபரம் வருமாறு:-

1.சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12639).

2.பெங்களூரு பிருந்தாவன் - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12640).

3.சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12675).

4.கோவை - சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்(12676).

5.விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16854).

6.திருப்பதி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ்(16853).

7.சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ்(16053).

8.திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(16054).

9.சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்(16057)

10.திருப்பதி சப்தகிரி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(16058).

11.மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர்(56640).

12.மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்(56641)

இந்த 12 ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து