தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு

எனினும், சில பதற்றமான பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதி மாவட்டம் ராஜோரி. இந்த மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு சமுதாயத்தினர் இடையே நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜோரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தற்போது அங்கு பதற்றம் தணிந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும், சில பதற்றமான பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு