தேசிய செய்திகள்

ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

ஓய்வு பெற்ற நீதிபதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

தினத்தந்தி

பாகல்கோட்டை: பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மானப்பா தலவாரா (வயது 53). ஓய்வு பெற்ற நீதிபதி. கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றிய அவர் சமீபத்தில் கட்டாய ஓய்வு பெற்றிருந்தார். இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த மானப்பா திடீரென்று தன்னிடம் இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நவநகர் போலீசார் விரைந்து வந்து நீதிபதியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். மானப்பாவுக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் ஒருவர் பெங்களூருவில் நீதிபதியாக இருக்கிறார், மற்றொரு மனைவியுடன் அவர் நவநகரில் வசித்து வந்தது தெரியவந்தது. அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்