தேசிய செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல்-மே மாதம் முதல் உயர தொடங்கியுள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வங்கிகளுக்கு குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் கூறுகையில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.3 சதவிகிதமாகவே தொடரும். இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல்-மே மாதம் முதல் உயர தொடங்கியுள்ளது என்றார்.

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்