தேசிய செய்திகள்

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு - நிதின் கட்காரி

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை, வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என நிதின் கட்காரி கூறிஉள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

மத்திய மந்திரி நிதின் கட்காரி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், டிஜிட்டல் பரிவர்த்தனை 58 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அன்றாட வாழ்வில், ரொக்க பயன்பாட்டை இந்த யோசனை குறைத்தது. கடந்த ஆண்டில், நாட்டில் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 26 லட்சமாக இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், வரிசெலுத்துவோரின் எண்ணிக்கை 56 லட்சமாக அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை சிலரை பாதித்து இருக்கும். அவர்கள் ஏன் காயப்பட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர்களிடம் கருப்பு பணம் இருந்தது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்த பணம் பயனற்றதாகி விட்டது.

நாட்டில், ஏராளமான நிறுவனங்கள் பல்வேறு வங்கிகளில் 100க்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதை கண்டறிந்தோம். இதனை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கருப்பு பணத்துக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை தொடரும் என கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை