தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் சாலை விபத்து: ஓட்டுனர் பலி; 34 பேர் காயம்

இமாசல பிரதேசத்தில் பேருந்து ஒன்று சாலை விபத்தில் சிக்கியதில் ஓட்டுனர் பலியானார். 34 பேர் காயமடைந்து உள்ளனர்.

தினத்தந்தி

மணாலி,

இமாசல பிரதேசத்தில் மணாலியில் இருந்து சிம்லா நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்து மண்டி நகரில், சண்டிகார்-மணாலி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் ஓட்டுனர் பலியானார். 34 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த நபர்களை உடனடியாக அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை