தேசிய செய்திகள்

விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் நீச்சல் குளம் கட்டிய ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ்

அரசு அதிகாரப்பூர்வ இல்லத்தில் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ் அனுமதி இன்றி நீச்சல் குளம் , உடற்பயிற்சி கூடம் கட்டியதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

மைசூரு

மைசூரு மாவட்ட கலெக்டராக இருப்பவர் ரோகிணி சிந்தூரி . இவர் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் என பாகுபாடு பார்க்காமல் தவறு செய்தால் தட்டிகேட்பதில் அஞ்சாதவர் என்ற பெயர் பெற்றவ. ரோகிணி சிந்தூரி அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பார்.

மைசூரு துணை ஆணையரின் அதிகாரபூர்வ இல்லத்தில் ரோகிணி சிந்தூரி அனுமதி பெறாமல் நீச்சல் குளம் , மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டியதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டது.

மைசூரு பிராந்திய ஆணையர் ஜி.சி.பிரகாஷ் இது குறைத்த் ஆய்வை மேற்கொண்டார் நீச்சல் குளம் கட்டுவது தொடர்பான ஆய்வு அறிக்கையில் ரோகிணி சிந்தூரி குளம் கட்டுவதற்கு தேவையான அனுமதிகளைப் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், சிந்துரி பாரம்பரிய சொத்தான ஜல் சன்னிதியில் குளம் கட்டுவதற்கு முன்பு பாரம்பரியத் துறையிடமிருந்தோ அல்லது அதிகாரம் பெற்ற பாரம்பரியக் குழுவினரிடமிருந்தோ அனுமதி பெறவில்லை. இதன் மூலம் விதிமுறைகளை மீறி உள்ளார்.

2020 டிசம்பர் 30 ஆம் தேதி கட்டுமானப் பணிகள் கட்ட உத்தரவிடப்பட்டது , தொடர்ந்து பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் ஆய்வு அறிக்கை கண்டறிந்தது. இருப்பினும், மார்ச் 2 ம் தேதி நடைபெற்ற நிர்மிதி கேந்திராவின் பொதுக் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்