தேசிய செய்திகள்

ரூ 1 கோடி மதிப்பிற்கு செல்லாத நோட்டுக்கள் வைத்திருந்த ஆறு பேர் கைது

ஹைதராபாத் காவல் துறையினர் ரூ 1 கோடி மதிப்பிற்கு செல்லாது என அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை வைத்திருந்த ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

ஹைதராபாத்

இவர்களில் பலர் சிறு வணிகர்கள் ஆவர். ஒருவர் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியராவார். செல்லாது என் அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றுவதற்கு இவர்கள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆறு பேரில் ராஜ் குமார் பகாடி என்பவரின் வீட்டில் சோதனையிட்ட மத்திய மண்டல சிறப்பு காவல் படையினர் நோட்டுக்களை கைப்பற்றினர். முகவர் ஒருவர் மூலம் நோட்டுக்களை மாற்றுவதற்கு பகாடியின் வீட்டில் கூடியிருந்த போது கைது செய்யப்பட்டனர். கச்சிகுடா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்