தேசிய செய்திகள்

பொதுமக்களிடையே உள்ள ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு ? ரிசர்வ் வங்கி தகவல்

ரூ.2,000 நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த ஆண்டு மே 19-ந் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகளை வங்கிக்கணக்கில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அச்சமயத்தில், ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 30-ந் தேதி நிலவரப்படி, 97.96 சதவீத நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்து விட்டன.

இன்னும் ரூ.7 ஆயிரத்து 261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே பொதுமக்களிடையே இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகளை குறிப்பிட்ட 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு