தேசிய செய்திகள்

சென்னை உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்திற்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு - மத்திய மந்திரி அமித்ஷா

வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

பேரிடர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமித் ஷா தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மாநில பேரிடர் மேலாண்மைத் துறை மந்திரிகள் , தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, கொல்கத்தா, புனே, அகமதாபாத் ஆகிய 7 மாநகரங்களில் வெள்ளத்தடுப்பு திட்டத்துக்காக 2500 கோடி ரூபாயும், மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் 5,000 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.825 கோடி தேசிய நிலச்சரிவு அபாயக் குறைப்புத் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது." இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்