தேசிய செய்திகள்

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டம் பைலை பஹடி நகரில் செக்டார்-1 பகுதியில் உள்ள வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 கார்கள் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் 2 கார்களில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், கார்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு காரில் கட்டுக்கட்டாக 2 கோடியே 64 லட்ச ரூபாய் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்திற்கு உரிய ஆதாரம் அளிக்காததால் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்