தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு

தமிழக அரசுக்கு நவம்பர் மாதத்திற்கான நிதியாக ரூ.335.41 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 15வது நிதிக்குழு பரிந்துரையின் அடிப்படையில் 13 மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்திற்கான நிதியாக ரூ.6,157.74 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு ரூ.491.41 கோடியும், மேற்கு வங்க மாநிலத்திற்கு 417.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்திற்கு ரூ.1,276.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு