தேசிய செய்திகள்

இந்திய விமானப்படைக்கு 75 பயிற்சி விமானங்கள் வாங்கியதில் ரூ.339 கோடி ஊழல்: வினியோகஸ்தர் வீடு, அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை

இந்திய விமானப்படைக்கு 75 பயிற்சி விமானங்கள் வாங்கியதில் ரூ.339 கோடி ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வினியோகஸ்தர் சஞ்சய் பண்டாரி வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள பிளாடஸ் ஏர்கிராப்ட் நிறுவனத்திடம் இருந்து 75 பயிற்சி விமானங்களை ரூ.2,895.63 கோடிக்கு வாங்குவதற்கு 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பிளாடஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக சஞ்சய் பண்டாரி மற்றும் பிமல் சரீன் ஆகியோருக்கு சொந்தமான ஆப்செட் இந்தியா சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்துடன் விதிமுறைகளை மீறி வினியோகஸ்தராக ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதற்காக சஞ்சய் பண்டாரியின் துபாய் மற்றும் இந்தியாவில் உள்ள அலுவலகங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் பெறுவதற்காக ரூ.339 கோடி லஞ்சமாக கொடுக்கப்பட்டதாகவும், இந்த பணம் இந்திய விமானப்படை மற்றும் ராணுவ அமைச்சகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. ஆயுத வினியோகஸ்தர் சஞ்சய் பண்டாரி, இந்தியா மற்றும் துபாயில் உள்ள அவரது நிறுவனங்கள், அகர்வால், வர்மா, பிமல் சரீன், அடையாளம் தெரியாத சில அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியதில் சஞ்சய் பண்டாரிக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. சோதனையில் கிடைத்த ஆதாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்