தேசிய செய்திகள்

மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றுக்கான திட்டங்களுக்கு ரூ.4,400 கோடி ஒதுக்கீடு

மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் சுத்தமான காற்றை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த பட்ஜெட்டில் ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி

பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது:-

10 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுத்தமான காற்று கிடைப்பதில்லை. இது கவலைக்குரியது. அங்கு சுத்தமான காற்றை உறுதி செய்வதற்காக திட்டங்களை வகுத்து செயல்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான நடைமுறைகள், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்படும்.

பழைய நீர்மின் நிலையங்கள் அதிக அளவில் கார்பனை உமிழ்கின்றன. எனவே, அத்தகைய நீர்மின் நிலையங்கள் மூடப்படும். அந்த இடங்கள், மாற்று தேவைக்கு பயன்படுத்தப்படும். பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்