தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் - 8 பேர் கைது

மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அளவுக்கு கள்ள நோட்டுகள் சிக்கியிருக்கும் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தினத்தந்தி

போபால்,

மத்திய பிரதேசத்தின் பாலாகாட் பகுதியில் மிகப்பெரிய அளவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2 நாட்களாக தீவிர நடவடிக்கையில் இறங்கிய போலீசார், அந்த கள்ளநோட்டு கும்பலை கையும் களவுமாக மடக்கினர்.

அந்த வகையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதில் 2 பேர் அண்டை மாநிலமான மராட்டியத்தில் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.5 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் ரூ.10 முதல் ரூ.2 ஆயிரம் வரை பல்வேறு மதிப்புகளில் அச்சிடப்பட்டு இருந்தன.

இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும் எங்கிருந்து அச்சிடப்பட்டன? இதன் பின்னணியில் இருக்கும் மர்ம நபர்கள் யார் யார்? என போலீசார் துருவித்துருவி விசாரித்து வருகின்றனா. மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய அளவுக்கு கள்ள நோட்டுகள் சிக்கியிருக்கும் விவகாரம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து