தேசிய செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளி: நாடாளுமன்ற மேலவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் மேலவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. #AIADMK #CauveryManagementBoard #RajyaSabha

தினத்தந்தி

புதுடெல்லி,

தமிழகத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீரின் டி.எம்.சி. அளவை குறைத்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் 2வது பட்ஜெட் கூட்டத்தொடரின் 16வது நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினரும் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சியினரும் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து மக்களவை இன்று மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட நிலையில், அவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தொடர்ந்து 16வது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை