தேசிய செய்திகள்

தமிழகத்திற்கு ரூ.4,466 கோடி விடுவிப்பு

மாநில அரசுகளுக்கான ரூ.1 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

புதுடெல்லி,

வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு, மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன்கள் தொடர்பான செலவினங்களுக்கு நிதியளிக்கவும், மத்திய அரசு ரூ.1,09,019 கோடி வரிப் பகிர்வை மாநில அரசுகளுக்கு முன்கூட்டியே ஒரு தவணையாக வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சி செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரூ.1,09,019 கோடி மதிப்பிலான வரிப் பகிர்வுத் தொகையை விடுவித்துள்ளது.

தமிழகத்திற்கான தொகையாக, ரூ.4466 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.