Image Courtesy: ANI  
தேசிய செய்திகள்

இந்தியாவை முழு உலகிற்கும் முன்மாதிரி சமுதாயமாக மாற்ற ஆர்எஸ்எஸ் உழைத்து வருகிறது- மோகன் பகவத்

சமுதாயத்தை ஒருங்கிணைக்க ஆர்எஸ்எஸ் உழைத்து வருவதாக மோகன் பகவத் பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

புதுடெல்லியில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் நலப்பணிகள் குறித்து இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று பேசினார். அப்போது அவர், இந்தியா முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரி சமுதாயமாக உருவாகும் வகையில் சமுதாயத்தை ஒருங்கிணைக்க ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல ஆளுமைகள் சமூகத்தின் தியாகம் மற்றும் நாட்டின் சுதந்திரத்திற்கு பங்களித்து உள்ளனர். சமுதாயத்தை ஒரே அமைப்பாக எழுப்பவும், அதை ஒருங்கிணைக்கவும், ஆர்எஸ்எஸ் தற்போது உழைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியா முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியான சமூகமாக உருவாக முடியும்.

சமூகநலப் பணிகளைச் செய்யும்போது 'எனது, என்னுடையது' என்ற எண்ணம் இல்லாமல் 'நமக்கு' என்ற எண்ணத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். இது நாம் ஒரு சமூகமாக உருவாக உதவும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்