தேசிய செய்திகள்

நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன.

தினத்தந்தி

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க இந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி நோட்டு அச்சகம் என 2 அச்சகங்கள் உள்ளன. இந்திய பாதுகாப்பு அச்சகத்தில், 1,900 ஊழியர்களும், கரன்சி நோட்டு அச்சகத்தில் 2 ஆயிரத்து 100 ஊழியர்களும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த அச்சகங்கள் 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் ஆகியோர் மட்டும் இந்த அச்சகங்களில் இருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்