ANI 
தேசிய செய்திகள்

மத்திய மந்திரி அனுராக் தாகூருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு

மல்யுத்த வீரர்கள் விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூரை அவரது வீட்டில் சந்திக்க சென்று உள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரண்சிங் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரச்சினைகள் தொடர்பாக மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடன் பேச்ச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. மல்யுத்த வீரர், வீராங்கனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்' என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசின் அழைப்பை தொடர்ந்து பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூரின் இல்லத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சந்திப்பில் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்தும் கலந்து கொண்டுள்ளார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரிஜ்பூஷன் சிங்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அனுராக் தாக்கூரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுக்கிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு