கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை

விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

மும்பை,

நடிகர் சல்மான் கானின் வீடு, மராட்டிய மாநிலம், மும்பை, பாந்த்ரா பகுதியில் உள்ள கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த அடிக்குமாடி குடியிருப்பின் வெளிப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த பேலீசார், குஜராத் மாநிலம், புஜ் பகுதியில் பதுங்கியிருந்த விக்கி குப்தா, சாகர் பால் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு ஆயுதங்களை சப்ளை செய்ததாக சோனு குமார், பிஷ்னோய், அனுஜ் தபன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் மும்பை சிறப்புப் பிரிவு போலீசாரின் விசாரணைக் காவலில் இருந்த கைதி அனுஷ் தபன் (23 வயது) தற்கொலை செய்து கொண்டார். அவர் லாக்-அப்பின் கழிவறையில் பெட்ஷீட்டைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையின்போது, அனுஜ் தபன் இறந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்