தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியில் மிகப்பெரிய சதிச்செயல் இருப்பதாக கூறப்படுவதால், அது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை வழக்கறிஞர் வினித் தண்டா என்பவர் தாக்கல் செய்து இருந்தார். தனது மனுவில், 40 வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மிகப்பெரிய சதி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இது குறித்து நீதி விசாரணை வேண்டும் என கூறியிருந்தார். தாக்குதலுக்கு 370 கிலோ ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் முழு விசாரணை நடத்த வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...