இது தொடர்பான மனுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி, அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்த கருத்தை விரும்பவில்லை என்றால் அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி மனு தாக்கல் செய்வது தீர்வாகாது. மத்திய அமைச்சர் ஏதாவது செய்திருந்தால், அது தொடர்பாக பிரதமர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அமைச்சரை பதவிநீக்கம் செய்ய கோர்ட்டு உத்தரவிடுவது பொருத்தமாக இருக்காது என தெரிவித்து, மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது, தள்ளுபடி செய்கிறோம் என தெரிவித்தார்.