தேசிய செய்திகள்

ரபேல் ஒப்பந்தம்; வழக்கை மீண்டும் விசாரிக்ககோரிய மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்குமாறும் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்ஸ் நாட்டின் டசால்டு நிறுவனத்திடமிருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது.

இந்த ஒப்பந்தத்தின்போது முறைகேடு நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 2018 டிசம்பர் 14-ம் தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற டசால்டு நிறுவனம் இந்திய இடைத்தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரான்ஸ் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் இதனால் ரபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் எம் எல் சர்மா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் ரவிந்திர பட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுதாரர் மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என கோர்ட்டு அறிவுறுத்தியது.

இதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார். இதையடுத்து, இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்