தேசிய செய்திகள்

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் அதிகரிப்பு காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 10ம்தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

இதன்பின்னர், தொற்று குறையாத நிலையில், 10ம் வகுப்பு முதல் கல்லூரிகள் வரை 18ந்தேதி மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி புதுச்சேரியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று (4ந்தேதி) முதல் திறக்கப்பட உள்ளன. வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் அரசு அறிவித்து உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து