கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவ.8ல் பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரியில் நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வாரத்தில் 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும். 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது. நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. சுயவிருப்பத்தின் பேரில் மாணவர்களை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்பலாம். அதேபோல 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை