தேசிய செய்திகள்

கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க ‘விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும்’ - ராகுல் காந்தி அழைப்பு

கொரோனா வைரசுக்கு புதுமையான தீர்வுகள் வழங்க விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் யுத்தம் தொடர்பாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட ஒரு பதிவில், கொரோனா வைரசை தோற்கடிக்க தேவையான மிகப்பெரிய ஆயுதமே, தீவிரமான பரிசோதனைகள்தான் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஒரு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதே நேரத்தில் இது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. இந்த நெருக்கடியான தருணத்தில் நமது நாட்டின் விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும், தரவு வல் லுனர்களும் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக புதுமையான தீர்வுகளை கண்டுபிடிக்க இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்