தேசிய செய்திகள்

திருப்பதி அருகே 14 செம்மரக்கட்டைகள் பறிமுதல் - தப்பியோடிவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருப்பதி அருகே 14 செம்மரக்கட்டைகளை வெட்டி சுமந்து சென்ற குழுவிடம் இருந்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மேதாசுந்தரராவ் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, சப்-இன்ஸ்பக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை அன்னதம்முலபண்டா பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி தோளில் தூக்கி வந்தனர். போலீசார் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கும்பல் விட்டுச் சென்ற 14 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்