தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 1,500 கிலோ போதை பொருள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து மராட்டியத்திற்கு கடத்திய 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தினத்தந்தி

மும்பை,

குஜராத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ எடை கொண்ட போதை பொருளை (ஹெராயின்) குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில், மராட்டியத்தின் ஜல்காவன் மாவட்டத்தில் எராண்டல் பகுதியருகே மும்பை போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றை ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்