மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று மாலை வர்த்தகம் நிறைவு பெறுகையில் சென்செக்ஸ் குறியீடு குறைந்து காணப்பட்டது. அதன் மதிப்பு, மாலை 4 மணியளவில் 372 புள்ளிகள் குறைந்து 59,636.01 புள்ளிகளாக உள்ளது.
டெக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, எல் & டி, டாடா ஸ்டீல் போன்றவற்றின் பங்குகள் நஷ்டத்தில் முடிவடைந்தன.
எஸ்.பி.ஐ, பவர்கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் போன்றவற்றின் பங்குகள் லாபத்துடன் நிறைவடைந்தன.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு, மாலை 4 மணியளவில் 133.85 புள்ளிகள் குறைந்து 17,764.80 புள்ளிகளாக உள்ளது.