தேசிய செய்திகள்

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.48 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்

செப்டம்பர் மாதம் ரூ.1.48 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (செப்டம்பர்) ரூ.1,47,686 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

'செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி (பொருட்கள் இறக்குமதியில் வசூலான ரூ.41,215 கோடி உட்பட) மற்றும் செஸ் ரூ.10,137 கோடி (பொருட்கள் இறக்குமதி மூலம் வசூல் செய்யப்பட்ட ரூ.856 கோடி உட்பட) ஆகும்' என கூறப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 7-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு