தேசிய செய்திகள்

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்களின் ஓட்டு நோட்டாவுக்கே

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள், தங்களது ஓட்டு நோட்டாவுக்கே என தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் இந்த தேர்தலில் நோட்டாவுக்கே ஓட்டு போடுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுபற்றி பாலியல் தொழிலாளியும், அவர்களின் உரிமைகளுக்காக பாடுபடும் தொண்டு நிறுவனத்தின் செயலாளருமான காஜல் போஸ் கூறியதாவது:-

மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிடும் 466 வேட்பாளர்களையும் நாங்கள் சந்தித்து, பாலியல் தொழிலை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை உங்கள் தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் எந்த வேட்பாளரும் எங்கள் கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் சேர்க்கவில்லை. இதனால் இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலிலும் நோட்டாவுக்கு தான் நாங்கள் ஓட்டுபோட்டோம். இன்று நடைபெறும் இறுதிகட்ட தேர்தலிலும் நாங்கள் நோட்டாவுக்கு தான் ஓட்டு போடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை