புனே,
மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் நீர்சத்து குறைபாடு காரணமாக புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
85 வயதான அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், 2 நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும், அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சரத்பவார் ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.