தேசிய செய்திகள்

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை சித்தராமையா ஆதரிக்கிறார்- மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை சித்தராமையா ஆதரிக்கிறார் என்று மந்திரி அரக ஞானேந்திரா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

தினத்தந்தி

சிவமொக்கா: கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா சிவமொக்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படம் வைத்தது ஏன் என்று சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார். இது இந்தியா, வெளிநாடு அல்ல. நமது விடுதலை போராட்ட வீரர்களின் படத்தை எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைக்க உரிமை உள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சித்தராமையா கருத்து கூறியுள்ளார். இது சரியல்ல.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் ஷெரீப் என்பவர் கடந்த 13-ந் தேதி வீரசாவர்க்கர் குறித்து தரம் தாழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. சுதந்திர போராட்டம் நடைபெற்றபோது வீரசாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஆனால் அவர் ஆங்கிலேயர்களின் ஷூ-வை நாவால் சுத்தம் செய்தார் என்று அந்த நபர் கூறிய கருத்தை ஏற்கவே முடியாது. வீரசாவர்க்கர் குறித்து சித்தராமையாவுக்கு எதுவும் தெரியாது. அரசியல் ஆதாயத்திற்காக அவர், முஸ்லிம்களை ஆதரிக்கிறார்.

இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு