புதுடெல்லி,
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 28 சிலைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 21 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 சிலைகளும், இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு சிலையும் மீட்கப்பட்டுள்ளது.
இவற்றில் தமிழகத்தில் உள்ள கேவில்களில் இருந்து கடத்தப்பட்ட விநாயகர், மாணிக்கவாசகர், உமா பரமேஸ்வரி, சேழர் காலத்து ஸ்ரீதேவி சிலைகளும், பார்வதி, துர்கா உள்ளிட்ட 9 சிலைகளும் மீட்கப்பட்டுள்ளன.