பெங்களூரு,
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார். பத்திரிக்கையாளார் கவுரி லங்கேஷ் கொலைக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், கவுரி லங்கேஷ் கொலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி, கர்நாடக அரசின் தலைமை செயலாளரை தொடர்பு கொண்டு இதுபற்றி விவரங்களை தாக்கல் செய்யும்படி கூறியுள்ளார். கொலை நடந்தது பற்றியும், கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை 19 அதிகாரிகளை கொண்ட சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. உளவுத்துறை ஐஜிபி பிகே சிங் தலைமையில் 19 அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவானது விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.