தேசிய செய்திகள்

இளம்பெண் கற்பழிப்பு; தந்தை சிறை காவலில் பலி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவு

உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கற்பழிப்பு மற்றும் அவரது தந்தை சிறை காவலில் பலியான சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. #BJPMLA #UnnaoRapeCase

தினத்தந்தி

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் செங்கார் தனது சகோதரர்களுடன் சேர்ந்து தன்னை கற்பழித்து விட்டார் என 18 வயது இளம்பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண்ணின் தந்தை பப்பு சிங் (வயது 50) எம்.எல்.ஏ.வின் சகோதரர் அதுல் சிங் மற்றும் சிலரால் தாக்கப்பட்டு உள்ளளனர். தொடர்ந்து பப்பு சிங் ஆயுத சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் போலீஸ் காவலில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் நேற்று உயிரிழந்து விட்டார். எம்.எல்.ஏ.வின் தூண்டுதலால் சிறைக்குள் வைத்து தனது தந்தையை கொலை செய்து உள்ளனர் என இளம்பெண் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்த நிலையில் அதுல் சிங் இன்று கைது ஆகியுள்ளார்.

இளம்பெண் கற்பழிப்பு மற்றும் அவரது தந்தை சிறை காவலில் மரணம் அடைந்தது ஆகியவற்றை பற்றி விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.டி.ஜி. (சட்டம் மற்றும் ஒழுங்கு) அனந்த குமார் கூறியுள்ளார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்