தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து: யாத்திரீகர்கள் 6 பேர் பலி

உத்தரகாண்டில் புனித யாத்திரை முடித்து விட்டு திரும்பும் போது பாறைகள் சரிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பத்திரீநாத்தில் இருந்து புனித யாத்திரையை முடித்துவிட்டு பேருந்தில் யாத்திரீகர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது பாறைகள் உருண்டு வந்து விழுந்தது. இதில் பாறை சரிவில் சிக்கி 6 யாத்திரீகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 8 யாத்திரீகர்கள் படுகாயமடைந்தனர்.

பாறை சரிவில் சிக்கி இறந்த யாத்திரீகர்களின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் இருந்து மீட்கப்பட்ட 3 யாத்திரீகர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மற்றவர்களின் நிலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீர்ஹட்டு என்ற இடத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டது .இதையடுத்து பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை வழியை திங்கட்கிழமை மூடினர். நிலைமை சரியானதையடுத்து நேற்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்