தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது - சுகாதார அமைச்சகம்

இந்தியாவில் இதுவரை 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு போட திட்டமிடப்பட்டு உள்ளது.தடுப்பூசி திட்டம் தொடங்கிய 12-வது நாளான நேற்று வரை 23 லட்சத்து 28 ஆயிரத்து 779 பயனாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதில் நேற்று மட்டுமே 2,99,299 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் தீவிர பக்க விளைவு அல்லது உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேநேரம் 16 பேர் இதுவரை சிறிய பக்க விளைவுக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது மொத்த எண்ணிக்கையில் 0.0007 சதவீதம் ஆகும். இதைப்போல தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். ஆனால் அதில் யாருக்கும் தடுப்பூசியால் மரணம் விளைந்ததாக தகவல் இல்லை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இவ்வாறு 12 நாட்களாக இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து