கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைப்பு

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

தினமும் 300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 15 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனாலும் ஊரடங்கு காரணமாக பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பகல்நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமலில் இருப்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை கருத்தில் கொண்டு இந்த மாதத்திற்கான (ஜூன்) ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு